ADDED : செப் 01, 2024 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா, ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் மாலையில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது.
மூன்றாம் நாளான நேற்று மாலை சிம்ம வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்தார். முன்னதாக அலங்காரம் செய்யப்பட்ட மூலவர், உற்ஸவருக்கு நடந்த அபிஷேக தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.