sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாரியூரில் சித்ரா பவுர்ணமி உற்ஸவம் ஏப்.14ல் கொடியேற்றம்

/

மாரியூரில் சித்ரா பவுர்ணமி உற்ஸவம் ஏப்.14ல் கொடியேற்றம்

மாரியூரில் சித்ரா பவுர்ணமி உற்ஸவம் ஏப்.14ல் கொடியேற்றம்

மாரியூரில் சித்ரா பவுர்ணமி உற்ஸவம் ஏப்.14ல் கொடியேற்றம்


ADDED : ஏப் 08, 2024 05:24 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி : சாயல்குடி அருகே மாரியூரில் பழமையும் புராதான சிறப்பும் பெற்ற பவள நிறவல்லி, பூவேந்திய நாதர் கோயில் சித்ரா பவுர்ணமி விழா ஏப்.14ல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.

வருண பகவானால் பூஜிக்கப்பட்ட இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்ஸவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருக்கல்யாண உற்ஸவத்திற்கு முன்பாக மாரியூர் மன்னார் வளைகுடா கடலில் சிவபெருமான் வேடமணிந்த சிவாச்சாரியார் வலையை வீசி தொல்லை தரும் சுறா மீனை வெல்வார்.

பின்னர் சுறா மீனுக்கு சாப விமோட்சணம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. மாரியூர் கோயில் பேஸ்கார் சீனிவாசன் கூறியதாவது: திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமானின் 57வது படலமாக வலை வீசிய நிகழ்வு இப்பகுதியில் நடந்ததாக புராணங்கள் நமக்கு உணர்த்துகின்றன. வேத ஆகமங்களின் அதி ரகசியங்களை ஈஸ்வரன், ஈஸ்வரிக்கு உபதேசத்தை அருளினார். அது சமயம் தேவியார் விருப்பமின்றி வேறு கவனத்தோடு கேட்டார்.

இதனை கண்ட ஈஸ்வரன் கோபமுற்று நீ மீனவ குடும்பத்தில் மீனவ பெண்ணாக வளரக் கடவாய் என சாபமிட்டார்.

இந்த சாப விமோசனத்திற்கு ஏதாவது பரிகாரம் கேட்டதற்கு நீ மீனவ பெண்ணாக வளர்ந்து மங்கை பருவம் அடையும் தருவாயில் நான் வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என திருவாய் அருளினார்.

அதே வேளையில் இறைவனின் சாபத்தால் சுறா மீனாக திரிந்த நந்தி தேவர் அப்பகுதி மீனவர்களுக்கு பெருந் துன்பம் விளைவித்து வந்தார். இதனால் மனம் வருந்திய மீனவர்கள் மீனவ தலைவனிடம் முறையிட்டனர்.

யார் இந்த சுறா மீனை அடக்கி கரை சேர்க்கிறார்களோ, அவர்களுக்கு என் மகளை திருமணம் செய்து தருகிறேன் என்று அறிவித்தார்.

ஈஸ்வரியை மணமுடிக்க தக்க தருணம் என கருதிய சிவபெருமான் மீனவர் வேடம் பூண்டு சுறா மீனை அடக்கி கரை சேர்த்து சாப விமோசனம் அளித்தார்.

இந்த லீலையை மையமாக வைத்து மாரியூர் கடலில் வலை வீசும் படலம் காட்சி ஏப்.23 (செவ்வாய்) சித்ரா பவுர்ணமி அன்று காலை 7:00 மணிக்கும் திருக்கல்யாணம் காலை 10:30 மணிக்கு நடக்கிறது என்றார்.






      Dinamalar
      Follow us