/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சித்திரை சைத்ரோத்ஸவம் நிறைவு சேதுக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
/
சித்திரை சைத்ரோத்ஸவம் நிறைவு சேதுக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
சித்திரை சைத்ரோத்ஸவம் நிறைவு சேதுக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
சித்திரை சைத்ரோத்ஸவம் நிறைவு சேதுக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
ADDED : மே 23, 2024 03:03 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சித்திரை சைத்ரோத்ஸவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.
நேற்று காலை 10:00 மணிக்கு கோயிலில் இருந்து கருட வாகனத்தில் கல்யாண ஜெகநாத பெருமாள், அனுமார் வாகனத்தில் ராமபிரான் எழுந்தருளி சேதுக்கரை கடலுக்கு சென்றனர். சேதுக்கரை சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் சன்னதி அருகே கல்யாண ஜெகநாத பெருமாள், ராமபிரான், சக்கரத்தாழ்வாருக்கு விசேஷ திருமஞ்சனம் சாற்று முறை கோஷ்டி பாராயணம் நடந்தது.
முன்னதாக சக்கரத்தாழ்வாருக்கு சேதுக்கரை கடலில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு சேதுக்கரையில் இருந்து மாலை 5:30 மணிக்கு அனுமன், கருடாழ்வார் வாகனத்தில் புறப்பட உற்ஸவமூர்த்திகள் திருப்புல்லாணி கோயிலை வந்தடைந்தனர். சந்திர பிரபை வாகனத்தில் வீதி உலா நடந்தது. உற்ஸவ சாந்தி பூஜையுடன் சித்திரை சைத்ரோத்ஸவம் நிறைவடைந்தது.

