sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஈஸ்வரன் கோயிலில் ஏப்.,13ல் சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்.,21ல் திருக்கல்யாணம்

/

ஈஸ்வரன் கோயிலில் ஏப்.,13ல் சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்.,21ல் திருக்கல்யாணம்

ஈஸ்வரன் கோயிலில் ஏப்.,13ல் சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்.,21ல் திருக்கல்யாணம்

ஈஸ்வரன் கோயிலில் ஏப்.,13ல் சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்.,21ல் திருக்கல்யாணம்


ADDED : மார் 30, 2024 05:05 AM

Google News

ADDED : மார் 30, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி, மார்ச் 30--

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.,13ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் உள்ளது. இங்கு ஏப்.,12 இரவு அனுக்ஞை, காப்பு கட்டுதல் நடக்கிறது.

ஏப்.13 காலை 10:45 மணி முதல் சித்திரை திருவிழாவின் முன்னோட்டமாக கோயில் கொடிமரத்தில் நந்தி கொடி ஏற்றப்பட உள்ளது.

அன்று முதல் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருகின்றனர். ஏப்.19 இரவு குதிரை வாகனத்தில் திக்விஜயம், மறுநாள் காலை கமல வாகனத்தில் அம்மன் தபசு கோலத்தில் எழுந்தருளுவார்.

அன்று மாலை ரிஷப வாகனத்தில் மாலை மாற்றுதல் நடக்கிறது. ஏப்.21 காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் விசாலாட்சி அம்பாள், சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு பட்டண பிரவேசம் நிறைவடைந்து மறுநாள் காலை 9:15 மணி முதல் ரத வீதிகளில் சித்திரை தேரோட்டம் நடக்கிறது.

தொடர்ந்து ஏப்.23 காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கம், மறு நாள் உற்ஸவ சாந்தி அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us