/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூறாவளி: நாட்டுபடகு மீனவர்களுக்கு தடை
/
சூறாவளி: நாட்டுபடகு மீனவர்களுக்கு தடை
ADDED : மே 16, 2024 02:39 AM
ராமேஸ்வரம்:கனமழை சூறாவளி எதிரொலியாக ராமேஸ்வரம் பகுதி நாட்டுபடகு மீனவர்கள் இன்று மே 16 முதல் மீன்பிடிக்க மீன்துறையினர் தடை விதித்தனர்.
இன்று முதல் மே 19 வரை வங்க கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வரை சூறாவளி வீசி, கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதில் சிரமம் ஏற்படும்.
இதை தவிர்க்க ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் இன்று முதல் மே 19 வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம். விசைப்படகுகள், நாட்டுபடகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க, ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயினுலாபுதீன் தெரிவித்தார்.