sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பன் பாலம் நுழைவில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களால் ஆபத்து

/

பாம்பன் பாலம் நுழைவில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களால் ஆபத்து

பாம்பன் பாலம் நுழைவில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களால் ஆபத்து

பாம்பன் பாலம் நுழைவில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களால் ஆபத்து


ADDED : மார் 28, 2024 11:00 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் நுழைவில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.

பாம்பன் கடலில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் கேந்திரமாக உள்ளது. இப்பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், சரக்கு லாரிகள் ராமேஸ்வரம் வந்து செல்கின்றன.

முக்கியமான இப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் மோசமாக உள்ளது. இதில் பாலத்தின் இருபுறம் நுழைவுப் பக்கவாட்டில் சீமைக் கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இவற்றை அகற்றி பாலத்தை பராமரிக்க மக்கள் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் விஷ ஜந்துக்கள், பாம்புகளின் புகலிடமாக மாறி உள்ளது. இதனால் பாலத்தில் செல்லும் பயணிகளுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் சீமைக்கருவேல மரங்களின் வேர்கள் பால பக்கவாட்டில் உள்ள கற்கள் இடையே துளைத்து செல்வதால் பாலத்தில் விரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மரங்களை அகற்றி பாலத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us