/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உடைகுளத்தில் பகலில் எரியும் மின்விளக்கு
/
உடைகுளத்தில் பகலில் எரியும் மின்விளக்கு
ADDED : ஆக 06, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே உடைகுளம் கிராமத்தில் பகலில் எரியும் மின்விளக்குகளால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.
முதுகுளத்துார் அருகே உடைகுளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு ஊராட்சி சார்பில் தெருக்களில் மின்விளக்கு அமைக்கப்பட்டது.
முதுகுளத்துார்--பரமக்குடி ரோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு சேதமடைந்த மின்கம்பத்தில் பகலில் எரியும் மின்விளக்குகளால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது.
கிராமங்களில் ஆய்வு செய்து பகலில் மின்விளக்கு எரியாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.