ADDED : ஜன 09, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே தோமயாபுரம் கண்மாயில் மான்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. நேற்று முன்தினம் மாலை கண்மாயிலிருந்து வெளியேறிய இரண்டு வயதுள்ள பெண் புள்ளிமான் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
மானை கண்ட நாய்கள் விரட்டிக் கடித்ததில் மான் இறந்தது. வனத்துறையினர் சென்று மானை மீட்டு கால்நடை டாக்டர் பரிசோதனைக்கு பின் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்தனர்.

