/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துபாயில் இறந்த தொழிலாளி உடலை மீட்க வலியுறுத்தல்
/
துபாயில் இறந்த தொழிலாளி உடலை மீட்க வலியுறுத்தல்
ADDED : ஆக 19, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே நெறிஞ்சிப்பட்டி சேர்ந்த தொழிலாளி குமரவேல் துபாயில் உயிரிழந்த அவரது உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டுவர குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
நெறிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த குமரவேல் 40. கடந்த ஆக.14ல் துபாய்க்கு கூலி வேலைக்கு சென்றார்.
இந்நிலையில் கடந்த ஆக.15ல் உடல்நிலை சரியில்லாமல் குமரவேல் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாநில, மத்திய அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
குமரவேலுக்கு மனைவி கலைச்செல்வி 35, மகன் ராஜ்குமார் 18, மகள் சித்ராதேவி 15 ஆகியோர் உள்ளனர்.