/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை சிறை மீனவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்
/
இலங்கை சிறை மீனவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 06, 2024 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்,:இலங்கை சிறையில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள், 25 பேரை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் அருகே பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று பாம்பனில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில், ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவ சங்க தலைவர் ராயப்பன், பாம்பன் ஊராட்சி முன்னாள் தலைவர் பேட்ரிக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில செயலர் செரோன்குமார், பாரம்பரிய மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி உட்பட மீனவர்கள் பங்கேற்றனர்.