sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அவத்தாண்டையில் வில்லாயுத மூர்த்தி கோயில் கும்பாபிஷேகம்

/

அவத்தாண்டையில் வில்லாயுத மூர்த்தி கோயில் கும்பாபிஷேகம்

அவத்தாண்டையில் வில்லாயுத மூர்த்தி கோயில் கும்பாபிஷேகம்

அவத்தாண்டையில் வில்லாயுத மூர்த்தி கோயில் கும்பாபிஷேகம்


ADDED : செப் 17, 2024 04:19 AM

Google News

ADDED : செப் 17, 2024 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி : சாயல்குடி அருகே அவதாண்டை கிராமத்தில் உள்ள வில்லாயுத மூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.

செப்.14ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாகசாலையில் எந்திர பிரதிஷ்டை, விக்கிரக பிரதிஷ்டை உள்ளிட்டவைகளும் நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு கஜ பூஜை, கோ பூஜை, தன பூஜை நடந்தது.

நேற்று காலை 10:00 மணிக்கு வில்லாயுத மூர்த்தி, விநாயகர், முருகன், அரியநாச்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் கமுதி சத்தியேந்திர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

மதுரை ஆதீனம், சிந்தலக்கரை காளி பராசக்தி சித்தர் பீடம் ராமமூர்த்தி அடிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனம், அகத்தியர் அறக்கட்டளை ஈஸ்வர் ராஜலிங்கம் ஆகியோர் பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவாற்றினர்.

மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை வில்லாயுத மூர்த்தி கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us