/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இ-சேவை மையங்களை அதிகரிக்க வேண்டும்
/
இ-சேவை மையங்களை அதிகரிக்க வேண்டும்
ADDED : மே 02, 2024 05:13 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் மக்கள் அலைக்கழிப்படுவதால் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருவாடானை தாலுகாவில் திருவாடானை, தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் வருமானம், இருப்பிடம், சாதி சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு மக்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்கின்றனர்.
உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு அரசுத் துறைகள் தொடர்புடைய சேவைகளும் உள்ளன.
இந்நிலையில் தாலுகாவில் குறிப்பிட்ட பொது இ-சேவை மையங்களே உள்ளன. இதில் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மாற்று புகைபடம் பதிவேற்றுவது, ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைப்பது உள்ளிட்ட பணிகளை ஆதார் இ-சேவை மையங்கள் வாயிலாக மேற்கொள்வதால் தினமும் ஏராளமானோர் இ- சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர்.
சில நேரங்களில் சர்வர் பிரச்னை உள்ளிட்ட பல காரணங்களால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். கூட்டம் அலைமோதுவதால் பெரும்பாலோர் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

