/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மார்ச் 14ல் வேலைவாய்ப்பு முகாம்
/
மார்ச் 14ல் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : மார் 12, 2025 01:13 AM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 14 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை நாடும் இளைஞர்களுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடக்கிறது. இதில் தனியார் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையானவர்களை தேர்வு செய்யலாம். பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த வேலை தேடும் இளைஞர்கள் பங்கேற்கலாம்.
சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார், ரேஷன் கார்டுகள், போட்டோக்கள் கொண்டுவர வேண்டும்.
இம்முகாமில் வேலை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் துறை நிறுவனங்கள், வேலை தேடுவோர் கட்டணம் ஏதுமின்றி www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.