/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழமுந்தலில் புயல் காப்பகத்தில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளி புதிய கட்டடத்திற்கு எதிர்பார்ப்பு
/
கீழமுந்தலில் புயல் காப்பகத்தில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளி புதிய கட்டடத்திற்கு எதிர்பார்ப்பு
கீழமுந்தலில் புயல் காப்பகத்தில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளி புதிய கட்டடத்திற்கு எதிர்பார்ப்பு
கீழமுந்தலில் புயல் காப்பகத்தில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளி புதிய கட்டடத்திற்கு எதிர்பார்ப்பு
ADDED : பிப் 24, 2025 04:48 AM
சாயல்குடி : -சாயல்குடி அருகே வாலிநோக்கம் ஊராட்சிக்குட்பட்ட கீழமுந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
6 முதல் 8 வகுப்புகள் உள்ளன. தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். நுாற்றுக்குமேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரசு நடுநிலைப்பள்ளி அருகே சேதமடைந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டதால்,
வகுப்பறை கட்டடமின்றி சிரமத்தை சந்தித்தனர். அதனை முன்னிட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அரசு புயல் காப்பக கட்டடத்தில் பள்ளிக்கூடம் செயல்படுகிறது.
கீழமுந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு இடவசதி உள்ளது.
எனவே மாணவர்களின் நலன் கருதி உயர்நிலைப் பள்ளியாக மாற்றவும், கூடுதல் வகுப்பறை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.