sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கீழமுந்தலில் புயல் காப்பகத்தில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளி புதிய கட்டடத்திற்கு எதிர்பார்ப்பு

/

கீழமுந்தலில் புயல் காப்பகத்தில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளி புதிய கட்டடத்திற்கு எதிர்பார்ப்பு

கீழமுந்தலில் புயல் காப்பகத்தில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளி புதிய கட்டடத்திற்கு எதிர்பார்ப்பு

கீழமுந்தலில் புயல் காப்பகத்தில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளி புதிய கட்டடத்திற்கு எதிர்பார்ப்பு


ADDED : பிப் 24, 2025 04:48 AM

Google News

ADDED : பிப் 24, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி : -சாயல்குடி அருகே வாலிநோக்கம் ஊராட்சிக்குட்பட்ட கீழமுந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

6 முதல் 8 வகுப்புகள் உள்ளன. தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். நுாற்றுக்குமேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரசு நடுநிலைப்பள்ளி அருகே சேதமடைந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டதால்,

வகுப்பறை கட்டடமின்றி சிரமத்தை சந்தித்தனர். அதனை முன்னிட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அரசு புயல் காப்பக கட்டடத்தில் பள்ளிக்கூடம் செயல்படுகிறது.

கீழமுந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு இடவசதி உள்ளது.

எனவே மாணவர்களின் நலன் கருதி உயர்நிலைப் பள்ளியாக மாற்றவும், கூடுதல் வகுப்பறை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us