நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரயில் நிலையம் அருகில் சில நாட்களுக்கு முன்பு 55 வயதுள்ள பெண் உடல் நலம் சரியில்லாமல் மயங்கி கிடந்தார்.அவரை மீட்டு பொதுமக்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்அனுமதித்தனர். அங்கு நேற்று அப்பெண் இறந்தார்.
அவரது பெயர் ஆயிஷா 55, என தெரிந்துள்ளது. ஊர், முகவரி தெரியவில்லை. சக்கரக்கோட்டை வி.ஏ.ஓ., அருள்செல்வன் புகாரில் ராமநாதபுரம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

