ADDED : செப் 05, 2024 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள் 4 ஆண்டுகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கற்பதோடு மட்டுமின்றி அதற்கு தேவையான ஆங்கில மொழித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
முதல்வர் பெரியசாமி, பேராசிரியர் கவிதா, மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர் ஒருங்கிணைப்பாளர்பேராசிரியர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.