sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தொழிலுக்கு திரும்பிய மீனவர்கள்

/

தொழிலுக்கு திரும்பிய மீனவர்கள்

தொழிலுக்கு திரும்பிய மீனவர்கள்

தொழிலுக்கு திரும்பிய மீனவர்கள்


ADDED : மார் 07, 2025 01:22 AM

Google News

ADDED : மார் 07, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், பாம்பன் மீனவர்கள் ஐந்து நாட்களுக்கு பின் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் பிப்., 24 முதல் வேலை நிறுத்தம் செய்தனர்.

தங்கச்சிமடத்தில் பிப்., 28 முதல் உண்ணாவிரதம், காத்திருப்பு, பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். தமிழக அரசு சில கோரிக்கைகளை ஏற்றதால், மார்ச் 4ல் வாபஸ் பெற்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பாம்பன் மீனவர்கள் மார்ச் 2 முதல் மீன் பிடிக்க செல்லவில்லை.

போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, ஐந்து நாட்களுக்கு பின் நேற்று 90 விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 12 நாட்களுக்கு பின், ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை மீன் பிடிக்க செல்ல உள்ளனர்.






      Dinamalar
      Follow us