sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவர்கள் சிறைக்காவல் செப்., 4 வரை நீட்டிப்பு

/

மீனவர்கள் சிறைக்காவல் செப்., 4 வரை நீட்டிப்பு

மீனவர்கள் சிறைக்காவல் செப்., 4 வரை நீட்டிப்பு

மீனவர்கள் சிறைக்காவல் செப்., 4 வரை நீட்டிப்பு


ADDED : ஆக 22, 2024 02:13 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன், தங்கச்சிமடத்தில் இருந்து ஆக., 9ல் நான்கு நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 35 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, புத்தளம் சிறையில் அடைத்தனர்.

இவர்களை விடுவிக்க கோரி, பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.இந்நிலையில், வாய்தா நாளான நேற்று 35 மீனவர்களையும் புத்தளம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

மீனவர்களின் சிறைக்காவலை செப்., 4 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் அவர்களின் விடுதலையை எதிர்பார்த்து, காத்திருந்த தமிழகத்தில் உள்ள குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us