/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கடலில் பதிவு எண் இல்லாத படகுகளில் மீன்பிடிப்பு
/
ராமேஸ்வரம் கடலில் பதிவு எண் இல்லாத படகுகளில் மீன்பிடிப்பு
ராமேஸ்வரம் கடலில் பதிவு எண் இல்லாத படகுகளில் மீன்பிடிப்பு
ராமேஸ்வரம் கடலில் பதிவு எண் இல்லாத படகுகளில் மீன்பிடிப்பு
ADDED : செப் 11, 2024 01:46 AM
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மீன்வளத்துறை அனுமதி பெற்ற பதிவு எண் இல்லாத விசைப்படகுகளில் சிலர் மீன் பிடிக்கின்றனர். இதனை தடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். ராமேஸ்வரத்தில் மீன்வளத்துறை அனுமதியுடன் 640 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இப்படகுகளை ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தவும், மீன்களை இறக்கவும் இடவசதியின்றி மீனவர்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும் மீனவர்களின் நலன் கருதி இப்படகுகளுக்கு மீன்வளத்துறையினர் பதிவு எண்களை வழங்கி கண்காணித்தும் வருகின்றனர்.
மீன் வளத்துறை அனுமதியின்றி பதிவு எண் இல்லாமல் பல படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் பாதுகாப்பு குளறுபடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ் கூறியதாவது: இந்திய- இலங்கை மீனவர் பிரச்னை உள்ள இப்பகுதிகளில் மீன்வளத்துறை அனுமதியின்றி பல படகுகள் கடலில் மீன் பிடித்து வருகின்றன. ஆக.28ல் மீன்பிடிக்கச் சென்று கடலில் மூழ்கிய படகிற்கு பதிவு எண் இல்லை.
மேலும் இலங்கை கடற்படை சிறைபிடித்த சில படகுகளுக்கும் பதிவு எண்கள் இல்லை. இப்படகுகளை கண்காணித்து தடுக்க மீன்வளத்துறை அதிகாரிகள் முன்வராமல் உள்ளனர். இதனால் பாதுகாப்பு குளறுபடி அபாயம் உள்ளது என்றார்.