sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பன்னந்தையில் காட்சிப்பொருளாக அரசு துணை சுகாதார நிலையம்

/

பன்னந்தையில் காட்சிப்பொருளாக அரசு துணை சுகாதார நிலையம்

பன்னந்தையில் காட்சிப்பொருளாக அரசு துணை சுகாதார நிலையம்

பன்னந்தையில் காட்சிப்பொருளாக அரசு துணை சுகாதார நிலையம்


ADDED : ஜூலை 21, 2024 04:34 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல்: -சிக்கல் அருகே பன்னந்தை ஊராட்சியில் 2022ம் ஆண்டு ரூ.30 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டும் பயனின்றி காட்சிப்பொருளாக உள்ளது.

பன்னந்தை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் திறப்பு விழாவிற்கு பிறகு எந்த பயன்பாடும் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது.

துணை சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர், செவிலியர்கள் யாரும் இல்லாததால் காட்சிப் பொருளாக பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

கிராம மக்கள் கூறியதாவது: காய்ச்சல், தலைவலி, விஷக்கடி உள்ளிட்ட அத்தியாவசிய முதலுதவிகளுக்கு துணை சுகாதார நிலையம் பயன்படுகிறது. மேலும் கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கவும் துணை சுகாதார நிலையம் பயன்படுகிறது.

எனவே அரசு நிதி வீணடிப்பதை தவிர்க்க பன்னந்தை துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மருத்துவத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us