/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மாதிரி பள்ளியில் மாணவர் பேரவைத் தேர்தல் வழிகாட்டுதல்
/
அரசு மாதிரி பள்ளியில் மாணவர் பேரவைத் தேர்தல் வழிகாட்டுதல்
அரசு மாதிரி பள்ளியில் மாணவர் பேரவைத் தேர்தல் வழிகாட்டுதல்
அரசு மாதிரி பள்ளியில் மாணவர் பேரவைத் தேர்தல் வழிகாட்டுதல்
ADDED : ஜூலை 08, 2024 06:09 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளியில் மாணவர்களிடையே ஜனநாயகப்பண்பை வளர்க்கும் விதமாக மாணவர் பேரவைத் தேர்தல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில், பள்ளி மாணவர்கள் உள்ளடக்கிய தேர்தல் குழு அமைக்கப்பட்டு தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி ஜூலை 6ல் மாதிரி பேரவைத் தேர்தல் நடந்தது. ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆசிரியரல்லாத பிற பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், கலைப்பயிற்றுநர்கள், மாணவர்கள் என பலர் ஓட்டளித்தனர்.
அன்று மாலையே ஓட்டுகள் எண்ணப்பட்டு மாணவர் பேரவை தலைவர், துணைத்தலைவர், கல்வித்துறை, சுகாதாரத்துறை, மாணவர் நலன், விண்வெளித் துறை போன்ற 8 துறைகளுக்கான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன்மூலம் மாணவர்கள் தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள், ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்கும் முறையையும், ஓட்டுக்கள் சமுதாயத்தில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை மாவட்ட அரசு மாதிரி பள்ளித் தலைமை ஆசிரியர் ரவி, ஆசிரியர்கள் மாணவ தன்னார்வலர்கள் செய்தனர்.