/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மு.துாரி கிராமத்தில் குதிரை எடுப்பு விழா
/
மு.துாரி கிராமத்தில் குதிரை எடுப்பு விழா
ADDED : ஜூன் 29, 2024 06:05 AM

முதுகுளத்துார், : முதுகுளத்துார் அருகே மு.துாரி கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இருளப்பசுவாமி, அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது.
மு.துாரி கிராமத்தில் அதிக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இருளப்பசுவாமி, அய்யனார் கோயில் குதிரை எடுப்பு, பொங்கல் விழா நடந்தது. முதுகுளத்துாரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் வழங்கப்பட்டது.
பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். தினந்தோறும் அய்யனாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. முதுகுளத்துார் அய்யனார் கோயிலில் இருந்து மண்ணால் செய்யப்பட்ட கருப்பணசாமி, பைரவர், குதிரைகள், தவழும் பிள்ளையை பக்தர்கள் தலையில் சுமந்து 4 கி.மீ., ஊர்வலமாக துாரி கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.
கடந்த ஆண்டு விளைந்த தானியங்கள் வைத்து சிறப்பு பூஜை மற்றும் கண் திறப்பு செய்யப் பட்டது. கிராமத்தின் முக்கிய வீதியில் துாக்கிச் சென்று இருளப்பசுவாமி, அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். மக்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

