/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உயர்நீதிமன்றத்தில் தகவல்
/
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உயர்நீதிமன்றத்தில் தகவல்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உயர்நீதிமன்றத்தில் தகவல்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : ஆக 27, 2024 05:45 AM
மதுரை : கமுதி அருகே போத்தநதி பூமிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
போத்தநதியில் சுத்திகரிக்கப்பட்ட (ஆர்.ஓ.,) குடிநீர் நிலையம் அமைக்கக்கோரி கலெக்டர், கமுதி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: ஆர்.ஓ., நிலையம் அமைக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவரது நிர்வாக அனுமதிக்காக நிலுவையில் உள்ளது.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.