ADDED : ஜூன் 16, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் ஜமாபந்தி ஜூன் 11ல் துவங்கியது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மாரிமுத்து தலைமையில் நடந்த இந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து 133 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மூன்று பேருக்கு இறப்பு நிவாரணம், ஆறு பேருக்கு பட்டா மாறுதலும் வழங்கப்பட்டது.
மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. தாசில்தார் கார்த்திகேயன், சமூக நலத்திட்ட தாசில்தார் கணேசன், வட்ட வழங்கல் அலுவலர் சிவசண்முகம், தலைமையிடத்து துணை தாசில்தார் இந்திரஜித் மற்றும் ஆர்.ஐ., வி.ஏ.ஓ., கலந்து கொண்டனர்.