ADDED : ஆக 23, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (ஆக.23ல்) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில், தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்யலாம். பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த வேலைதேடும் இளைஞர்கள் தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம். விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் காலை 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வந்து பங்கேற்கலாம். இம்முகாமில் வேலை பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து ஆகாது.

