ADDED : ஆக 03, 2024 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே காரங்காடு செங்கோல் மாதா சர்ச் திருவிழா ஜூலை 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு தேர் பவனி நடந்தது.
செபஸ்தியார், சவேரியார், செங்கோல்மாதா தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சர்ச்சை வந்தடைந்தது.
முன்னதாக பாதிரியார்கள் அருள் ஜீவா, ஆரோன், சாமிநாதன் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.