/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அகஸ்தியர் தீர்த்தத்தில் கும்பாபிஷேகம்
/
அகஸ்தியர் தீர்த்தத்தில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 06, 2024 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சேதுக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியர் தீர்த்தம் கிராமத்தில் உள்ள வாழவந்தாள் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
செப்.4ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. ரக்க்ஷா பந்தன், கும்பஸ்தானம், யாகசாலை பிரவேச பூஜைகளுக்கு பின் நேற்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை நடந்தது.
காலை 10:30 மணிக்கு கோயில் கோபுர விமான கலசத்தில் திருப்புல்லாணி சபரிநாதன் ரங்கநாதன் பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சேதுக்கரை அகஸ்தியர் தீர்த்தம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.