sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கால்நடை கணக்கெடுப்பு பணி

/

கால்நடை கணக்கெடுப்பு பணி

கால்நடை கணக்கெடுப்பு பணி

கால்நடை கணக்கெடுப்பு பணி


ADDED : பிப் 25, 2025 07:07 AM

Google News

ADDED : பிப் 25, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் கால்நடை கணக்கெடுப்பு பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிக்கும் வகையில் களப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை டாக்டர்கள் தெரிவித்தனர்.கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:

கால்நடை கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுவது வழக்கம்.

2019ல் கணக்கெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2024 அக்.,ல் கணக்கெடுப்பு பணி துவங்கியது.

திருவாடானை தாலுகாவில் திருவாடானை, தொண்டி, பெருவாக் கோட்டை, வெள்ளையபுரம், ஊரணிக் கோட்டை, திருவெற்றியூர், வட்டாணம் ஆகிய கிராமங்களில் கால்நடை மருத்துவமனைகள் உள்ளன.

அனைத்து வருவாய் கிராமங்கள் வாரியாக வீடு, வீடாகவும், இறைச்சி மற்றும் கோழி பண்ணைகளில் கால்நடைத்துறை அலுவலர்கள் நேரடியாக சென்று தகவல் சேகரித்து பிரத்யேக செயலியில் மொபைல் வாயிலாக பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மார்ச்சுக்குள் கணக்கெடுப்பு முடியும். இக்கணக்கெடுப்பு முடிவின் படி மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யும் என்றனர்.






      Dinamalar
      Follow us