/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுதுவதற்கு மாற்று ஏற்பாடு செய்யுங்க... கிராமங்களில் இருந்து வரும் மக்கள் கோரிக்கை
/
கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுதுவதற்கு மாற்று ஏற்பாடு செய்யுங்க... கிராமங்களில் இருந்து வரும் மக்கள் கோரிக்கை
கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுதுவதற்கு மாற்று ஏற்பாடு செய்யுங்க... கிராமங்களில் இருந்து வரும் மக்கள் கோரிக்கை
கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுதுவதற்கு மாற்று ஏற்பாடு செய்யுங்க... கிராமங்களில் இருந்து வரும் மக்கள் கோரிக்கை
ADDED : செப் 17, 2024 04:12 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வரும் மக்களிடம் மனு எழுதித் தருவதற்கு ரூ.50 முதல் ரூ.100 வரை வசூலிப்பதால் தனி நபர்கள் மனு எழுதி தருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஏழை மக்கள் வசதிக்காக படித்த மகளிர் குழுவினர், சமூக ஆர்வலர்கள், கல்லுாரி என்.என்.எஸ்., மாணவர்கள் மனு எழுதித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். வாரந்தோறும் குறைகள், கோரிக்கை மனுக்களை தனியாகவும், கிராம மக்கள் ஒன்றாக இணைந்து கலெக்டரிடம் அளிக்கின்றனர்.
இவர்களுக்கு மனு எழுதித் தருபவர்கள் இடையே போட்டா போட்டி ஏற்படுகிறது. மனு எழுத பேப்பர் வாங்கி கொடுத்து மனுவிற்கு ரூ.50 முதல் ரூ.100 வரை பணம் வசூலிப்பதால் கிராமங்களில் இருந்து வரும் ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தற்போது கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் மனு எழுதி தருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எழுதப் படிக்க தெரியாத ஏழை, கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே சேவை மனப்பான்மை உள்ள சமூக ஆர்வலர்கள், படித்த மகளிர் குழுவினர், கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்களை திங்களன்று மட்டும் கூடாரம் அமைத்து இலவசமாக மனு எழுதித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறுகையில், நேற்று மனுக்கள் அவ்வளவாக வரவில்லை. மக்கள் பாதிக்காத வகையில் மனு எழுதி உதவி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

