ADDED : மே 28, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார், : முதுகுளத்துார் அருகே மட்டியரேந்தல் கிராமத்தில் மரியன்னை, சூசையப்பர், மிக்கேல் அதிதுாதர் ஆலய திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. பாதிரியார் குரூஸ் ஜோக்கின் தலைமை வகித்தார். தினந்தோறும் சிறப்பு திருப்பலி, கூட்டு பிரார்த்தனை நடந்தது.
நேற்று மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மரியன்னை, சூசையப்பர், மிக்கேல் அதிதுாதர் தேர் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சர்ச்சை சென்றடைந்தது.
ஊர்வலத்தின் போது கிராமம் மற்றும் உலக நன்மைக்காக பொதுமக்கள் ஜெபமாலை ஜெபித்தனர்.
பின் சர்ச்சில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். விழாவில் மட்டியரேந்தல், தாளியரேந்தல் உட்பட சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.