நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருநாழி: பெருநாழி அருகே டி.எம்.கோட்டையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி களரி பாரிவேட்டை உற்ஸவ விழா நடந்தது. மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
முன்னதாக நேர்த்திக்கடன் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்தனர். பெண்கள் பொங்கல் வைத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.