/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் ஏப்.21ல் மீனாட்சி திருக்கல்யாணம்; ஏப்.12ல் சித்திரை திருவிழா கொடியேற்றம்
/
பரமக்குடியில் ஏப்.21ல் மீனாட்சி திருக்கல்யாணம்; ஏப்.12ல் சித்திரை திருவிழா கொடியேற்றம்
பரமக்குடியில் ஏப்.21ல் மீனாட்சி திருக்கல்யாணம்; ஏப்.12ல் சித்திரை திருவிழா கொடியேற்றம்
பரமக்குடியில் ஏப்.21ல் மீனாட்சி திருக்கல்யாணம்; ஏப்.12ல் சித்திரை திருவிழா கொடியேற்றம்
ADDED : ஏப் 04, 2024 11:33 PM
பரமக்குடி : பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஏப்.12ல் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. ஏப்.21ல் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது.
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.11 இரவு காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. ஏப்., 12 காலை கோயில் கொடிமரத்தில் நந்தி கொடி ஏற்றப்படும். தினமும் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது.
ஏப்.18 காலை நடராஜர் வீதி வலம் வருகிறார். மறுநாள் பிச்சாண்டவர் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருள உள்ளார்.
ஏப்.20 காலை விசாலாட்சி அம்பிகையுடன் சந்திரசேகர சுவாமி திருவீதி வலமும், இரவு திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏப். 21 மாலை 5:00 மணிக்கு சுந்தரேஸ்வரர்,மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
ஏப்.22ல் ரத வீதிகளில் சித்திரை தேரோட்டம், மறுநாள் கொடி இறக்கமும், ஏப்., 24 உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஷ்டிகள்,ஆயிர வைசிய சபையினர் செய்கின்றனர்.

