/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
/
முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
ADDED : ஏப் 08, 2024 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியாக பால்குடம் ஊர்வலம் நடந்தது. சித்தி விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். முத்துமாரியம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
கிராமத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பக்தர்கள் அக்கினி சட்டி, ஆயிரம் கண் பானை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

