ADDED : மார் 07, 2025 08:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: அரப்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் முகாம் நிறைவு விழா நடந்தது.
முதல்வர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வெங்கட் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.மருதகம் கிராமத்தில் 7 நாட்கள் முகாமில் தொடக்கப்பள்ளி வளாகம், கோயில், ரோட்டோரங்கள் சுத்தம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் நிர்மல்குமார், நாகராஜ் செய்தனர்.