/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குண்டும் குழியுமான ரோட்டில் மக்கள் சிரமம்
/
குண்டும் குழியுமான ரோட்டில் மக்கள் சிரமம்
ADDED : மே 18, 2024 04:20 AM

கமுதி, : கமுதி அருகே கே.நெடுங்குளம், திருசிலுவைப்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
கமுதி அருகே கே.நெடுங்குளம், புதுக்கிராமம், தலைவன் நாயக்கன்பட்டி, திருசிலுவைப்புரம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். கமுதியிலிருந்து இந்த கிராமங்களுக்கு செல்லும் ரோடு பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
முறையான பராமரிப்பின்றி ரோட்டில் ஜல்லிக்கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. மழைக் காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் இவ்வழியே செல்வதற்கு கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.
கே.நெடுங்குளம் பாலமுனியாண்டி கூறியதாவது: கமுதியில் இருந்து கே.நெடுங்குளம், திருசிலுவைப்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் செல்லும் முக்கியமான ரோடு சேதமடைந்து நடப்பதற்கே லாயக்கற்றதாக மாறி உள்ளது. அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ்செல்வதற்கு கூட சிரமப்படுகின்றனர்.
குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லுாரிக்கு மாணவர்கள் செல்ல முடியவில்லை. டூவீலரில் செல்பவர்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர் வெற்றி பெற்ற பின் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற செவி சாய்க்கவில்லை.
எனவே மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய ரோடு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

