
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: வாலிநோக்கம் ஊராட்சி அடஞ்சேரி கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், அடஞ்சேரியில் நுாறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பலர் பனைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து வாலிநோக்கம் ஊராட்சியில் இருக்க விரும்புகிறோம். எனவே அடஞ்சேரியை புதிதாக உருவாக்கப்படும் ஏர்வாடி பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.