/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி வகுப்பறையில் கூரை அமைக்க ராமநாதபுரம் ரோட்டரி சங்கம் உதவி
/
பள்ளி வகுப்பறையில் கூரை அமைக்க ராமநாதபுரம் ரோட்டரி சங்கம் உதவி
பள்ளி வகுப்பறையில் கூரை அமைக்க ராமநாதபுரம் ரோட்டரி சங்கம் உதவி
பள்ளி வகுப்பறையில் கூரை அமைக்க ராமநாதபுரம் ரோட்டரி சங்கம் உதவி
ADDED : ஆக 03, 2024 04:46 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரோட்டரி சங்கசேவை திட்டத்தில்கழுகூரணி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புதிதாக கூரைஅமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ராமநாதன் தலைமை வகித்தார்.டாக்டர் சின்னதுரை அப்துல்லா, பொறியாளர் காந்தி, டாக்டர் சுஜாதா குமார் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி சங்க தலைவர் ஜெகதீஸ், செயலாளர் பாலமுருகன் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் பாலிதீன் பை, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து துணிப்பை பயன்படுத்த வலியுறுத்தினர். அனைவருக்கும் துணிப்பைகள் வழங்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தலைமையாசிரியர் சித்ரா நன்றி கூறினார்.