ADDED : மே 07, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் அக்னி தீர்த்த கடல் 200 மீ., திடீரென உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பவளப் பாறைகள் வெளியில் தெரிந்தன.
மதியம் 12:00 மணிக்கு பின் நீர்மட்டம் உயர்ந்ததும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. கோடை காலத்தில் கடல் உள்வாங்குவதும், பின் இயல்பு நிலைக்கு திரும்புவதும் சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

