/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டி.எஸ்.பி., அலுவலக ரோடு சீரமைப்பதற்கு கோரிக்கை
/
டி.எஸ்.பி., அலுவலக ரோடு சீரமைப்பதற்கு கோரிக்கை
ADDED : மே 04, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: தில்லையேந்தல் ஊராட்சியில் கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலகம் செல்லும் பிரதான ரோடு 500 மீ.,க்கு பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். மக்கள் நல பாதுகாப்பு கழகச் செயலாளர் முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது:
கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலகம் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் தில்லையேந்தல் ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதிய ரோடு அமைக்கக் கோரி திருப்புல்லாணி பி.டி.ஓ., விற்கு கோரிக்கை மனு அளித்துள்ளேன்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி புதிய தார் ரோடு அமைக்க வேண்டும் என்றார்.