/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடப்பதற்கே பயன்படாத ரோடு: வாகைகுளம் மக்கள் சிரமம்
/
நடப்பதற்கே பயன்படாத ரோடு: வாகைகுளம் மக்கள் சிரமம்
UPDATED : மார் 05, 2025 10:05 AM
ADDED : மார் 04, 2025 10:19 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வாகைகுளம் நடுத்தெருவில் ரோடு சேதமடைந்துள்ளதால், நடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர்.
வாகைகுளம் நடுத்தெருவில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு ரோடு வசதி செய்யப்பட்டது.
தற்போது வரை எந்த பராமரிப்பும் செய்யப்படாமல் உள்ளது.
கடந்த சில மாதத்திற்கு முன்பு ஜல்ஜீவன் திட்டத்தில் புதிய தண்ணீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு மூடப்பட்டுள்ளது.
தற்போது ரோடு முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக நடப்பதற்கே பயன்படாத ரோடாக மாறியுள்ளது.
வழக்கறிஞர் உமாசங்கர் கூறுகையில், வாகைகுளம் நடுத்தெருவில் கடந்த சில மாதங்களாக ரோடு நடப்பதற்கு கூட முடியாமல் சேதமடைந்துள்ளது.
இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தற்போது தற்காலிகமாக ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.