/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தங்கச்சிமடம் அருகே ரோட்டோரம் குப்பை
/
தங்கச்சிமடம் அருகே ரோட்டோரம் குப்பை
ADDED : மே 25, 2024 05:30 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை குவிந்து கிடப்பதால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வருகின்றனர். இதில் தங்கச்சிமடம் ஊராட்சி மெய்யம்புளி பஸ் ஸ்டாப் அருகில் இப்பகுதியில் வசிப்பவர்கள் குப்பை, வீட்டு உபயோக கழிவு பொருட்களை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர்.
ரோட்டோஓரத்தில் குவிந்து கிடக்கும் குப்பையை அப்புறப்படுத்தி சுகாதாரம் பராமரிக்காமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பலமுறை வலியுறுத்தியும் பலனில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த ரோட்டில் செல்லும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்தபடி செல்கின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலையில் குப்பையை அகற்றி சுகாதாரம் பராமரிக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.

