sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி; மூவருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கல்

/

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி; மூவருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கல்

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி; மூவருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கல்

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி; மூவருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கல்


ADDED : ஆக 12, 2024 11:44 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் கோயிலில் ஊழியர்கள் சேம நல நிதியில் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மூன்று பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

ராமேஸ்வரம் கோயில் ஊழியர்கள் சேமநல நிதி கணக்கில் செலுத்த வேண்டிய பணத்தை கோயில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிவனருள் குமரன், கணக்கர் ரவீந்திரன் மோசடி செய்ததாகராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர்.

இந்த வழக்கை 2020ல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிப்பதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. விசாரணையில் சினருள் குமரன் ராமநாதபுரம் தனியார் வங்கியில் கோயில் பெயரில் நன்கொடைக்காக அனுமதியின்றி கணக்கு துவங்கியதும், கணக்கு துவங்க முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.

மேலும் சிவனருள் குமரன் கோயில் பணத்தை தனது தந்தை கோபால் வங்கி கணக்கிற்கு மாற்றியதும் தெரிந்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சிவனருள் குமரன், அவரது தந்தை கோபால், கணக்கர் ரவீந்திரன், முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிந்தனர்

இந்த வழக்கில் 2000 பக்கத்திற்கும் மேல் குற்றப்பத்திரிக்கை தயார் செய்து ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 2 ல் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் சிவனருள் குமரன், அவரது தந்தை கோபால், முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் ஆஜராகினர். கணக்கர் ரவீந்திரன் ஆஜராகவில்லை.

ஆஜரான மூன்று பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. கணக்கர் ரவீந்திரனுக்கு அடுத்த முறை ஆஜராகும் போது வழங்கப்படும் என்பதால்மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் செப்.,13க்கு வழக்கை தள்ளி வைத்தார்.






      Dinamalar
      Follow us