/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்
ADDED : பிப் 22, 2025 02:03 AM

ராமேஸ்வரம்,:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
மண்டபம் கோவில்வாடி கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு மரைன் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது இரு டூவீலரில் வந்த 3 பேரை போலீசார் பிடித்து சோதனையிட்டதில் பிளாஸ்டிக் கேனில் பதுக்கி வைத்திருந்த மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 105 கிலோ கடல் அட்டைகள் இருந்தது.
விசாரணையில் அவர்கள் வேதாளையை சேர்ந்த சீனிசாகுல் ஹமீது 30, அப்துல் மீரான் 28, முகையதீன் மீராசா 32, ஆகியோர் என தெரிந்தது. கடல் அட்டைகளை மறைவான இடத்தில் காயவைத்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரிந்தது.
அதன் மதிப்பு ரூ.5 லட்சம். இதனையடுத்து கடல் அட்டைகள், மூவரையும் மண்டபம் வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
2.8 டன் மஞ்சள் பறிமுதல்
ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 2800 கிலோ சமையல் மஞ்சளை சுங்கத்துறையினர் மினி சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சத்திரக்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரையில் இருந்து வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்திய போது வேகமாக சென்றனர். அந்த வாகனத்தை சுங்கத்துறையினர் விரட்டிச் சென்ற போது எட்டிவயல் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு கடத்தியவர்கள் தப்பி ஓடினர். வாகனத்தை சோதனையிட்ட போது அதில் 2800 கிலோ சமையல் மஞ்சள் இருந்தது. இவற்றை படகில் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.

