sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட ரூ.4.56 கோடி தங்கம் பறிமுதல்; கீழக்கரையை சேர்ந்த 2 பேர் கைது

/

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட ரூ.4.56 கோடி தங்கம் பறிமுதல்; கீழக்கரையை சேர்ந்த 2 பேர் கைது

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட ரூ.4.56 கோடி தங்கம் பறிமுதல்; கீழக்கரையை சேர்ந்த 2 பேர் கைது

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட ரூ.4.56 கோடி தங்கம் பறிமுதல்; கீழக்கரையை சேர்ந்த 2 பேர் கைது


ADDED : ஆக 12, 2024 11:18 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.4.56 கோடி மதிப்புள்ள 6 கிலோ 600 கிராம் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த மதுரை வருவாய் புலனாய்வுத் துறையினர் கீழக்கரையை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக மதுரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய் புலனாய்வுத்துறையினர் திருப்பாச்சேத்தி டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது காரில் வந்த இருவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அவர்களது காரை சோதனையிட்ட போது 6 கிலோ 600 கிராம் தங்கம் இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதும், கடத்தல்காரர்கள் கீழக்கரை ஓ.ஜே.எம்.தெருவை சேர்ந்த சேகுசாதிக் 44, சங்குகுளிக்கார தெருவை சேர்ந்த சாதிக் அலி 45, என தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த வருவாய் புலனாய்வுத்துறையினர் தங்கம் யாருக்காக கடத்தப்பட்டது என்பது குறித்து விசாரிக்கின்றனர். இதன் மதிப்பு ரூ.4.56 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us