sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோயில் ஊருணியில் கழிவுநீர் கலப்பு

/

கோயில் ஊருணியில் கழிவுநீர் கலப்பு

கோயில் ஊருணியில் கழிவுநீர் கலப்பு

கோயில் ஊருணியில் கழிவுநீர் கலப்பு


ADDED : ஜூலை 22, 2024 04:48 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல்: சிக்கல் அய்யன் கோயில் ஊருணி செல்லும் வரத்து கால்வாயில் கழிவுநீர் செல்வதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சிக்கல் அய்யன் கோயில் ஊருணி 2.5 ஏக்கரில் அமைந்துள்ளது. முன்பு குடிநீர் ஊருணியாக இருந்தது காலப்போக்கில் கழிவுகள் கலந்ததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

அய்யன் கோயில் ஊருணியில் சுற்று பகுதியைச் சேர்ந்தவர்கள் குளிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர். சிக்கல் நகரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக கோயில் ஊருணி வரத்து கால் மூலமாக நேரடியாக விடப்படுவதால் இதனால் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

சிக்கலைச் சேர்ந்த விவசாயி போஸ் கூறியதாவது: அய்யன் கோயில் ஊருணியில் பொதுமக்கள் குளிக்க முடியாத அளவிற்கு கழிவுநீர் கலக்கிறது. 12 அடி அகலம் உள்ள ஓடையின் வரத்துக்கு கால்வாய் பகுதி தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஓடையின் நீர்வரத்து பகுதியில் கழிவுநீர் செல்வதால் ஊருணியில் குளிப்பவர்களுக்கு தோல் நோய் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது எனவே சிக்கல் ஊராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்திடவும் மழை காலத்திற்கு முன்பாக முறையாக துார்வாரிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us