ADDED : ஜூலை 02, 2026 05:50 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் சன்னதியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக் கவசம் சாற்றி வழிபாடு நடத்தினர்.
எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பெருமாள் சன்னதியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து புதிய வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு ஆஞ்சநேயர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டார்.
பின்னர் தீப துாப ஆராதனைகள் நடந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
