sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சுற்றுலா பாலம் அமைக்க அக்னி கடலில் மண் ஆய்வு

/

சுற்றுலா பாலம் அமைக்க அக்னி கடலில் மண் ஆய்வு

சுற்றுலா பாலம் அமைக்க அக்னி கடலில் மண் ஆய்வு

சுற்றுலா பாலம் அமைக்க அக்னி கடலில் மண் ஆய்வு


ADDED : செப் 03, 2024 05:53 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்,: -ராமேஸ்வரத்தில் சுற்றுலா படகிற்கு புதிய கான்கிரீட் பாலம் அமைக்க சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் அக்னி தீர்த்த கடலில் மண் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் தமிழ்நாடு கடல்சார் கழகம் சார்பில் தனியார் சுற்றுலாப் படகு சவாரி உள்ளது. இங்குள்ள படகு நிறுத்தும் பாலம் மரக்கட்டையில் அமைத்த பாலமாக உள்ளது. இதனை சிமென்ட் கலவையுடன் கூடிய கான்கிரீட் பாலம் தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி இக்கடலில் உள்ள மண்ணின் காரத்தன்மை, அதற்கேற்ப கட்டுமானம் அமைக்க மண் பரிசோதனை செய்ய சென்னை ஐ.ஐ.டி.,யிடம் அரசு வலியுறுத்தியது.

இதையடுத்து நேற்று ஐ.ஐ.டி., பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அக்னி தீர்த்த கடலில் மண் பரிசோதனை செய்ய மிதவை இரும்பு வளைவு அமைத்தனர். இன்று முதல் (செப்.3) கடலில் 20 முதல் 30 அடி ஆழத்தில் துளையிட்டு மண்ணை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என பொறியாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us