/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை ஏப்.29க்கு தள்ளிவைப்பு
/
மாணவி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை ஏப்.29க்கு தள்ளிவைப்பு
மாணவி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை ஏப்.29க்கு தள்ளிவைப்பு
மாணவி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை ஏப்.29க்கு தள்ளிவைப்பு
ADDED : ஏப் 17, 2024 06:27 AM
ராமநாதபுரம் : -பரமக்குடி பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி உள்பட 5 பேர் மீதான வழக்கு விசாரணையை நீதிபதி கோபிநாத் ஏப்.29 க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க முன்னாள் நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ஜவுளி கடை உரிமையாளர் ராஜாமுகமது, மற்றும் புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டு 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இவர்களில் அ.தி.மு.க. நிர்வாகி சிகாமணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
சிகாமணி ஜாமினை ரத்து செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் கீதா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
நீதிபதி இளங்கோவன் சிகாமணிக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சிகாமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியுள்ளது.
இந்நிலையில்மாணவி பலாத்கார வழக்கு விசாரணை நேற்று ராமநாதபுரம் கூடுதல் மகிளா கோர்ட்டில் நடந்தது. சிகாமணி, அன்னலட்சுமி உமா, கயல்விழி 3 பேரும் ஆஜர் ஆகினர். புதுமலர் பிரபாகர், ராஜமுகமது ஆகியோர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகினர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத் வழக்கு விசாரணையை ஏப்.29க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

