/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை கோயிலில் சுந்தரர் கைலாய காட்சி
/
திருவாடானை கோயிலில் சுந்தரர் கைலாய காட்சி
ADDED : ஆக 12, 2024 03:44 AM

திருவாடானை : ஆடிப்பூரவிழாவில் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சுந்தரர் கைலாயம் சென்ற நிகழ்ச்சி நடந்தது.
திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக.6ல் தேரோட்டம், 9 ல் திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று சுந்தரர் கைலாயம் சென்ற நிகழ்வு நடந்தது. காலை 10:00 மணிக்கு சுந்தரர் வெள்ளை யானையில் மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்டு காட்சியளித்தார். அதனை தொடர்ந்து ஆதிரெத்தினேஸ்வரர், பிரியாவிடை, சிநேகவல்லி அம்மனுடன் கையாலத்தில் காட்சியளித்தார்.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருநொடித்தான் மலை என்ற பக்தி பாடல்களை பாடியபடி சுந்தரர் சிவனை நோக்கி கையாலயம் சென்ற காட்சி நடந்தது.
அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை காலை 10:00 மணிக்கு உற்ஸவ சாந்தியும் நடக்கிறது.