sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் விமரிசையாக நடந்த சுவாமி, அம்மன் ஆடித் திருக்கல்யாணம்

/

ராமேஸ்வரத்தில் விமரிசையாக நடந்த சுவாமி, அம்மன் ஆடித் திருக்கல்யாணம்

ராமேஸ்வரத்தில் விமரிசையாக நடந்த சுவாமி, அம்மன் ஆடித் திருக்கல்யாணம்

ராமேஸ்வரத்தில் விமரிசையாக நடந்த சுவாமி, அம்மன் ஆடித் திருக்கல்யாணம்


ADDED : ஆக 10, 2024 02:42 AM

Google News

ADDED : ஆக 10, 2024 02:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் கோயிலில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.

ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 29ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 12ம் நாள் விழாவான ஆடித் திருக்கல்யாண விழாவையொட்டி நேற்று இரவு 7:00 மணிக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர்.

கோயில் குருக்கள் வேத மந்திரம் முழங்க இரவு 7:55 மணிக்கு ராமநாதசுவாமி ஆசியுடன் பர்வதவர்த்தினி அம்மனுக்கு கோயில் குருக்கள் உதயகுமார் திருமாங்கல்யம் அணிவிக்க திருக்கல்யாண விழா விமரிசையாக நடந்தது.

பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், ராமேஸ்வரம் காஞ்சி மடம் நிர்வாகி சாச்சா, யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், அக்னி தீர்த்த கடற்கரை புரோகிதர்கள் சங்க தலைவர் ராமசுப்பிரமணியன், செயலாளர் சுந்தரேசன், பொருளாளர் சுப்பிரமணியன் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம், யாத்திரை பணியாளர் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us